
அதேபோன்று அநுராதபுரம் சந்தியில் பல நூறு வருடங்களாக அமைந்திருந்த இஸ்லாமிய மக்களின் புனித ஷியாரம் பகுதியில் கூடிய சிலர் அதனை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இது குறித்து முஸ்லிம் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விரு விடயங்கள் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் சமயத் தலைவர்கள் சிலரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்ட போது அவர்கள் தெரிவித்த கருத்துக்களைத் தருகின்றோம்.
இந்து வித்தியாநிதி சிவஸ்ரீ
குகானந்த சர்மா
மிருக பலி என்பது பழங்காலந்தொட்டு நிகழ்ந்து வருகின்ற ஒரு கிராமிய வழிபாட்டு முறையாகும். இந்தியாவில் தொன்று தொட்டு இது நடைமுறையில் இருந்து வருகிறது. சைவ சமயத்தில் மாத்திரமன்றி ஏனைய மதங்களிலும் இந்த வழிபாட்டு முறை நடந்தேறி வருகின்றது. எனவே, இந்துக்களின் கிராமிய வழிபாட்டு முறையை நீக்குவதென்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை வியாபார ரீதியில் நோக்கக் கூடாது.
தத்துவார்த்த ரீதியில் நோக்கினால் எது சரி, எது பிழை என்பதை அறிய முடியாது. எவ்வாறெ னினும் மதங்களின் பழங்கால நடைமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சிந்துவெளி நாகரிகத்திலிருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே இவ்விடயத்தில் சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடி நல்ல தீர்வுகளைக் காண வேண்டுமே தவிர எடுத்த எடுப்பில் சரி, பிழை கூறுவது முறையாகாது.

தேசிய மொழிகள், நல்லிணக்க
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
இன்னொரு மத சம்பிரதாயங்களில் மற்றவர்கள் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. எமது மத உணர்வுகளை இன்னொரு மதத்தின் மீது திணிக்கவும் முடியாது. மிருக பலி என்பது மதரீதியாக காலா காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை நிறுத்துவதாக விருந்தால், மீன் வெட்டுவதையும் நிறுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக நோக்கினால், மிருகங்களை வெட்டாமல் விற்க முடியாது. ஆகவே, முழு காளி கோவில்களிலும் நடைபெறும் மிருக வேள்வியைத் தடுக்க வேண்டுமெனத் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை”.
பிரதியமைச்சர் மேர்வின் சில்வா
முன்னேஸ்வரம் காளி கோவிலில் நான் நடந்து கொண்ட விதம் எந்தக் கவலையையும் எனக்குத் தரவில்லை. நான் அதைப் பற்றி கவலையடையவுமில்லை. அலட்டிக் கொள்ளவும் இல்லை. பரிகாரம் தேடவும் மாட்டேன். இறைவன் எனக்குத் தண்டனை தரப்போவதுமில்லை. நான் யாருக்கும் பயந்தவன் அல்லன். எங்கு வேண்டுமானாலும் எந்த நேரமும் செல்வேன். தப்பைத் தட்டிக் கேட்க தவறமாட்டேன். இந்து மதமும் பெளத்த மதமும் அஹிம்சையைப் போதிப்பவை. அஹிம்சை வழியிலேயே நான் செயற்பட்டேன். மிருக பலி கூடாது என்று பலரும் கூறுகின்றனர். தப்புச் செய்தவர்களைத் தண்டித்து நல்லது செய்பவர்கள் மீது இறைவன் அன்பு காட்டுவார்.
யோகராஜன் எம்.பி. (ஐ.தே.க.)
மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகள் முரட்டுத் தனமானவை. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயிரக்கணக்கான மிருகங்கள் உணவுக்காக வெட்டப்படும் நிலையில் மிருக பலி பூஜை செய்ய என்ன தடை? மேர்வின் சில்வா கோவில் பூசகருடனும் விரும்பத்தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர். கோவில் பக்தர்களின் நம்பிக்கையையும் மனங்களையும் உடைத்துள்ளார். இந்த மக்கள் காலா காலமாகச் செய்து வரும் மிருக பலி பூஜையைத் திடீரென தடுத்து நிறுத்தியதன் நோக்கமென்ன கோவில் விவகாரத்திலும் சமய விவகாரத்திலும் எவருக்கும் தலையிட அனுமதி கிடையாது.
சீ. யோகேஸ்வரன் எம்.பி. (த.தே.கூ)
இந்துக் கோவில்களில் மிருகப் பலியைத் தடுப்பதற்கு விரைவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் உள்நோக்கமின்றி தாமாக முன்வந்து அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் அதனை நான் வரவேற்கின்றேன். இந்து ஆலயங்களுக்குள் மிருகப்பலிக்கு இடமளிக்கக் கூடாது. அதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மேர்வின் சில்வா இந்த விடயத்தில் அரசியல் தேட முனைந்தால் அதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சிந்துவெளி நாகரிகத்திலிருந்தே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே இவ்விடயத்தில் சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடி நல்ல தீர்வுகளைக் காண வேண்டுமே தவிர எடுத்த எடுப்பில் சரி, பிழை கூறுவது முறையாகாது.

தேசிய மொழிகள், நல்லிணக்க
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
இன்னொரு மத சம்பிரதாயங்களில் மற்றவர்கள் தலையிடுவதற்கு உரிமை கிடையாது. எமது மத உணர்வுகளை இன்னொரு மதத்தின் மீது திணிக்கவும் முடியாது. மிருக பலி என்பது மதரீதியாக காலா காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை நிறுத்துவதாக விருந்தால், மீன் வெட்டுவதையும் நிறுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக நோக்கினால், மிருகங்களை வெட்டாமல் விற்க முடியாது. ஆகவே, முழு காளி கோவில்களிலும் நடைபெறும் மிருக வேள்வியைத் தடுக்க வேண்டுமெனத் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை”.
பிரதியமைச்சர் மேர்வின் சில்வா
முன்னேஸ்வரம் காளி கோவிலில் நான் நடந்து கொண்ட விதம் எந்தக் கவலையையும் எனக்குத் தரவில்லை. நான் அதைப் பற்றி கவலையடையவுமில்லை. அலட்டிக் கொள்ளவும் இல்லை. பரிகாரம் தேடவும் மாட்டேன். இறைவன் எனக்குத் தண்டனை தரப்போவதுமில்லை. நான் யாருக்கும் பயந்தவன் அல்லன். எங்கு வேண்டுமானாலும் எந்த நேரமும் செல்வேன். தப்பைத் தட்டிக் கேட்க தவறமாட்டேன். இந்து மதமும் பெளத்த மதமும் அஹிம்சையைப் போதிப்பவை. அஹிம்சை வழியிலேயே நான் செயற்பட்டேன். மிருக பலி கூடாது என்று பலரும் கூறுகின்றனர். தப்புச் செய்தவர்களைத் தண்டித்து நல்லது செய்பவர்கள் மீது இறைவன் அன்பு காட்டுவார்.
யோகராஜன் எம்.பி. (ஐ.தே.க.)
மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகள் முரட்டுத் தனமானவை. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயிரக்கணக்கான மிருகங்கள் உணவுக்காக வெட்டப்படும் நிலையில் மிருக பலி பூஜை செய்ய என்ன தடை? மேர்வின் சில்வா கோவில் பூசகருடனும் விரும்பத்தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர். கோவில் பக்தர்களின் நம்பிக்கையையும் மனங்களையும் உடைத்துள்ளார். இந்த மக்கள் காலா காலமாகச் செய்து வரும் மிருக பலி பூஜையைத் திடீரென தடுத்து நிறுத்தியதன் நோக்கமென்ன கோவில் விவகாரத்திலும் சமய விவகாரத்திலும் எவருக்கும் தலையிட அனுமதி கிடையாது.
சீ. யோகேஸ்வரன் எம்.பி. (த.தே.கூ)
இந்துக் கோவில்களில் மிருகப் பலியைத் தடுப்பதற்கு விரைவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் உள்நோக்கமின்றி தாமாக முன்வந்து அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் அதனை நான் வரவேற்கின்றேன். இந்து ஆலயங்களுக்குள் மிருகப்பலிக்கு இடமளிக்கக் கூடாது. அதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மேர்வின் சில்வா இந்த விடயத்தில் அரசியல் தேட முனைந்தால் அதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.